சாலையில் விளையாடும் குரங்குகள் விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி அருகே குட்டி குரங்குகளுடன் தாய்க்குரங்குகள் விளையாடிய காட்சி சாலையில் சென்றவர்கள் கவனத்தை ஈர்த்தது.
பொள்ளாச்சி அருகே குட்டி குரங்குகளுடன் தாய்க்குரங்குகள் விளையாடிய காட்சி சாலையில் சென்றவர்கள் கவனத்தை ஈர்த்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆழியாறு அணை, ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவதால், அங்குள்ள குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன. உணவு தேடி சாலையில் அலையும்போது, குரங்குகள் செய்யும் சேட்டையால் வாகன ஓட்டிகளும் அவதி அடைகின்றனர்.