கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழப்பு - இறப்பதற்கு முன் வெளியிட்ட ஆடியோ...

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழந்த நிலையில், இறப்பதற்கு முன் அவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-07-28 07:59 GMT
திரௌபதியம்மன் அம்மன் கோவில் அருகே மருத்துவமனை நடத்தி வந்த, மருத்துவர், சாந்திலால் மூச்சு திணறல் காரணமாக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சையில் திருப்தியில்லை என கூறி, அவர் இரண்டு நாட்களில் இறந்து விடுவேன் என ஆடியோ வெளியிட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோவில் இரண்டு தினங்களில் இறந்துவிடுவேன் எல்லோருக்கும் வணக்கம் என உருக்கமான பதிவு, இராஜபாளையம் மக்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தையும் ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்