தந்தையின் இறுதி சடங்கிற்கு மாலை வாங்க சென்ற மகன் விபத்தில் உயிரிழந்த சோகம்

நிலக்கோட்டை அருகே தந்தையின் இறுதி சடங்கிற்கு மாலை வாங்க சென்ற மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-07-28 07:47 GMT
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர் கடந்த 26ஆம் தேதி நள்ளிரவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிசடங்கிற்கான பொருட்கள் வாங்குவதற்காக அவரது மகன் ஜோதி முருகன் தனது நண்பருடன் நிலக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது குண்டலப்பட்டி அருகே சென்ற போது, தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த மினி லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஜோதி முருகன், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்