நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் - சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட உண்மை சான்றிதழ்களை வழங்க கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-24 10:44 GMT
தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைதான சென்னை மாணவன் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட உண்மை சான்றிதழ்களை வழங்க உத்தரவிடக் கோரி, அந்த மாணவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தனது எதிர்கால நலன் கருதி, நீதிமன்றத்தில் இருக்கும் உண்மை சான்றிதழ்களை வழங்க  உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், வருகிற 31ஆம் தேதிக்குள் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்