இ - பாஸ் பெற முடியாததால் திடீர் முடிவு - தமிழக - கேரள சோதனை சாவடியில் நடந்த திருமணம்

இ-பாஸ் கிடைக்காததால் தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் வைத்து ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்தது.

Update: 2020-07-04 09:47 GMT
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோதிகாவுக்கம், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் என்கிற இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக திருமணம் தொடர்ந்து தள்ளி போய்க் கொண்டே இருந்தது. மேலும் கேரளாவை சேர்ந்த மணமகனுக்கு தமிழகம் வர இ-பாஸ் கிடைக்காததால் தமிழக கேரள எல்லையில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி ஆரியங்காவு சோதனை சாவடி அருகே இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் மற்றும் மணமகளின்  பெற்றோர் மட்டும் கலந்து கொண்டு இருவருக்கும் ஆசியை வழங்கினார். பின்னர் மணமகளுக்கு கொரோனா சோதனை செய்த பிறகு அவர் கணவர் வீடான கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்