முழு ஊரடங்கு: வெறிச்சோடியது காய்கறி சந்தை - மழையால் சாலைகள், கடைகள் சேதம்

முழு ஊரடங்கு காரணமாக திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-06-28 07:53 GMT
முழு  ஊரடங்கு காரணமாக திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த சில தினங்களாக பெய்தும் வரும் மழை காரணமாக தற்காலிக சந்தையில் சாலைகள் முழுவதும் சேதமடைந்து  அப்பகுதியே சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் சேற்றில் சிக்கியதால்  வியாபாரிகள் அவதிக்கு உள்ளாயினர்.  அதேபோல் ஒருசில கடைகளும் மழையின் காரணமாக சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளையும், கடைகளையும் சரிசெய்யும் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்