சென்னையிலிருந்து அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட உடல் - நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் 10 பேருக்கு கொரோனா

சென்னையில் உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்வதற்காக கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2020-06-21 13:38 GMT
சென்னையில் உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்வதற்காக கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துவ தேவாலய பங்குத்தந்தை கலந்து கொண்டார். தற்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவருடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறையினர் சேகரித்து வருகின்றனர். இதில் பங்குதந்தையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து, தேவாலய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அப்பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்