புதுக்கோட்டைக்கு வந்த‌ காவிரி நீர் - கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து வரவேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர்.

Update: 2020-06-20 14:28 GMT
புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் எல்லைப் பகுதியான நெடுவாசல் அரியலூர் ஜமீன் மேற்பனைக்காடு  உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த காவிரி நீரை மக்கள் காவிரி தாயாக பாரம்பரிய முறைப்படி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, வழிபட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்