தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் - குடிபோதையில் காரில் இரு முறை வலம் வந்து வெறிச்செயல்

குடிபோதையில் காரில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2020-06-06 07:04 GMT
சென்னைஅண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள எம்ஜிஆர் காலனி, ஏழாவது பிரதான சாலையில் நேற்று மாலை மர்ம நபர்கள் இரண்டு பேர் காரில் வேகமாக வந்துள்ளனர். குடிபோதையில் இருந்த அவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது காரை மோத பார்த்துள்ளனர். அப்போது பொதுமக்கள் கூச்சலிட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அதே இடத்திற்கு இரவு 10 மணி அளவில் திரும்பிய அதே நபர்கள் ஒரு பெண் உட்பட 5 பேரை கட்டையால் மற்றும் கைகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்