குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நெல்லூர்பேட்டை பகுதியில் அவர் நடத்தி வந்த கிளினிக்கை மூடி, கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.