"இந்த பிஸ்கட் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து" - தெரியாமல் வாங்கி கொடுத்து பீதியில் பெற்றோர்

Update: 2024-04-28 07:32 GMT

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே பெட்டிக்கடையில் வாங்கிய பிஸ்கட்டில் கட்டுக் கம்பி‌ இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பிளாஸ்டிக் கவரில் இருந்த பிஸ்கட் பாக்கெட் வாங்கிய நிலையில், அந்த பிஸ்கட்டில் கட்டுக் கம்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பெட்டிக்கடை உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். குழந்தைகள் இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என பெற்றோர் அச்சம் தெரிவித்து, இதனை உணவுத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்