கண்டெய்னர் லாரியில் சடலங்கள் என வதந்தி - மீனவ பெண்கள் திடீர் சாலை மறியல்

திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவ பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-04 11:12 GMT
திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவ பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் இருப்பதாக குற்றம்சாட்டிய அந்த பெண்கள், தொற்று பாதிப்பில் இறப்பவர்களின் சடலங்களை ஒட்டுமொத்தமாக கொண்டு வரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், கண்டெய்னர் லாரியை திறந்துகாட்டி விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பெண்கள் மறியலை கைவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்