ஆண் குழந்தை கடத்தல் விவகாரம் : "காதலனை கரம்பிடிக்க குழந்தையை கடத்தினேன்" - பதற வைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்

திருப்பத்தூரில், காதலனை நம்ப வைப்பதற்காக பச்சிளம் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2020-06-02 13:42 GMT
திருப்பத்தூரில், காதலனை நம்ப வைப்பதற்காக பச்சிளம் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நஹினாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கர்ப்பமடையாத காரணத்தினால், காதலன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், ஏதாவது ஒரு குழந்தையைக் கடத்தி அவருக்கு பிறந்தது என்று நம்பவைப்பதற்காக குழந்தையை கடத்தியதாக நஹீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்