மதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு
கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பேசிய அவர், நமோ செயலியில் மதுரையை சேர்ந்த சலூன்கடைகாரர் மோகன் தனது மகளின் கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்சத்தை ஏழைகளுக்காக செலவிட்டுள்ளதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.