கொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

Update: 2020-05-27 15:09 GMT
கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து பல்வேறு கிராமங்களுக்கு ஆசிரியர்களை அழைத்து செல்ல போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் அனுப்பப்பட்டன. ஆனால் கொரோனோ அச்சம் காரணமாக  ஆசிரியர்கள் ஒருவர்கூட பேருந்தில் ஏறாமல்  தங்கள் சொந்த வாகனத்தில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வந்துள்ளனர். இதனால் பெருமளவு எரிபொருள் நஷ்டம் அடைந்ததாக போக்குவரத்து துறையினர் அதிர்ச்சி தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்