அனல் வீசிய பூமியில் சட்டென மாறிய வானிலை...திரண்டு வந்து வெளுத்து வாங்கிய கருமேக கூட்டம்

Update: 2024-05-04 06:04 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் கிராம மக்கள் கிடா வெட்டி கொண்டாடினர். கொட்டாவூர் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்த வரும் நிலையில், கடும் வெயிலால் வறட்சி நிலவி உள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், குளிர்ச்சி நிலவுவதுடன், நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மக்கள், ஊரில் உள்ள முனீஸ்வரன் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து, 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி வழிபாடு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்