கோதையாறு பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு - ஜூன் 8 முதல் நீர் திறக்க முதலமைச்சர் ஆணை

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்திற்காக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சித்தார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-26 10:48 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்திற்காக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சித்தார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 8ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு, விநாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன பகுதிகளில் 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்