போலி பதிவெண்ணுடன் வலம்வந்த லாரிகள் பறிமுதல் - ஓட்டுநர்கள் இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புலவர்பள்ளி பகுதியில் போலி பதிவெண்ணுடன் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2020-05-25 03:32 GMT
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புலவர்பள்ளி பகுதியில், போலி பதிவெண்ணுடன் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். லாரி ஓட்டுநர்களான கரூரை சேர்ந்த பிரனேஷ் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த வைரபெருமாள் ஆகிய இருவரையும் அவர்கள் கைது செய்தனர்.  போலி பதிவு எண் கொண்டு, வேறு ஏதேனும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்