கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

Update: 2020-05-20 07:47 GMT
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இதில், கீழடியுடன் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக, தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்