``வாயை மூடிக்கொள்ள வேண்டும்'' - முற்றும் முன்னாள் நண்பர்களின் யுத்தம்

Update: 2024-05-04 07:35 GMT

சில நேரங்களிலும் இசையும், சில நேரங்களில் மொழியும் ஒன்றை விட ஒன்று சிறந்ததாகத் திகழும் நிலையில் இதைப் புரிந்து கொள்ளாதவர் அஞ்ஞானி என்று இளையராஜாவை வைரமுத்து மேடை ஒன்றில் மறைமுகமாக சாடியிருந்தார்... இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இதைக் கடுமையாக எதிர்த்திருந்தார். பதிலுக்கு வைரமுத்து உழைப்பாளர் தின வாழ்த்தின் போது எக்ஸ் தளத்தில் இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டினார். அந்த வகையில் தற்போது புதிய பதிவிட்டுள்ள வைரமுத்து, "புயல் வீசத் தொடங்கி விட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்றும், வெள்ளம்

படையெடுக்கத் தொடங்கி விட்டால் நாணல் நதிக்கரையில் தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து, மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கி விட்டதால் கவிஞன் தன் குரலைத் தணித்துக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்... இதன் மூலம் இளையராஜாவுக்கும் தனக்கும் இடையிலான கருத்து வேறுபாடு விவகாரத்தில் மக்கள் தனக்காக பேசத் தொடங்கியுள்ளதால், தான் அமைதியாக இருப்பதாக வைரமுத்து சூசகமாக பதிலளித்துள்ள நிலையில், இணையவாசிகள் கலவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்