மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதி உதவி - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து,அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-20 03:19 GMT
மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து,அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணங்கள்,கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,தங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என  தமிழ்நாடு இசை வேளாளர் அறக்கட்டளை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வரும் 29 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்