புதுக்கோட்டையில் தண்ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
புதுக்கோட்டையில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
புதுக்கோட்டையில் தண்ணீர் எடுக்கச் சென் றபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழந்தார். கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி தன் வீட்டின் அருகே குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்த கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. குளக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.