போதை ஆசாமியால் இரு தரப்பு மோதல் - கிராமத்தில் பதற்றம்...போலீஸ் பாதுகாப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே போதை ஆசாமியின் தகாத பேச்சால், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்த கலைமணி, குடிபோதையில் தெருவில் இருந்தவர்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். கோபம் அடைந்த மக்கள், இதை தட்டிக்கேட்டதால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பு மற்றொரு தரப்பை உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த கந்தசாமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த மோதல் தொடர்பாக, பலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பு மோதலில் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, இலைக்கடம்பூர் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதை தணிக்க, அரியலூர் எஸ்.பி சீனிவாசன், டி.எஸ்.பி திருமேனி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.