தவறான தகவலால் பதநீர் இறக்க தடை - தந்தி டிவி செய்தி எதிரொலி - அனுமதி அளித்த போலீசார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எலச்சிபாளையம் பகுதியில் பதநீர் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலுக்கு போலீசார் தடை விதித்த நிலையில், தந்தி டிவி செய்தி காரணமாக போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

Update: 2020-05-18 04:20 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எலச்சிபாளையம் பகுதியில் பதநீர் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலுக்கு போலீசார் தடை விதித்த நிலையில், தந்தி டிவி செய்தி காரணமாக போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில்,கள் இறக்கி விற்பனை செய்ததாக அளிக்கப்பட்ட தவறாக  தகவலை அடுத்து பதநீர் இறக்குவதற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில் தந்தி டிவியில் உண்மைச் செய்தி வெளியானதை அடுத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்