"கோவில் சொத்துக்களின் வாடகை உயர்வு" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..

Update: 2024-04-28 11:12 GMT

கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களின் வாடகையை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் பல மடங்கு உயர்த்தியதாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைகிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முறையாக வாடகை செலுத்தி வரும் நிலையில், கடைகளுக்கான மாத வாடகை 860 ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில், மனுதாரர்களின் வழக்கை தள்ளுபடி செய்த தனிநீதிபதி இந்த விவகாரத்தில் கோவில் தரப்பில் 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்