அயோடின் கலந்த உப்பை விற்பனை செய்ய உத்தரவு - மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு

இயற்கையாக கிடைக்கும் உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பையே விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-27 10:59 GMT
இயற்கையாக கிடைக்கும் உப்புக்கு பதிலாக, அயோடின் கலந்த உப்பையே விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயற்கை முறையில் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை நம்பி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளதாக கூறி, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய, தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்