ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

Update: 2020-02-22 21:59 GMT
ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, பவானி ஆற்றில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, நடனமாடியபடி சென்றனர்.  இதைத் தொடர்ந்து, கோயிலில் நடந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்று, சிவனின் அவதாரமான தன்னாசி மண் உருவசிலையை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்