ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கு : கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவர் கைது

அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-19 23:17 GMT
அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கரா பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவரை கடந்த 3 ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக செல்லம் பாளையம் கிராமத்தை சேர்ந்த அபிமன்னன் என்பவரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்