பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பரபரப்பு : வீடியோ எடுத்த இளைஞர் மீது தாக்குதல்

பழனியில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்த இஸ்லாம் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-18 22:20 GMT
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திவரும் தொடர் போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்த கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை சையது அபுதாகீர் என்பவர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் அபுதாகீர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் 
2 தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தை தொடரமாட்டோம் என இஸ்லாம் அமைப்புகள் உறுதியளித்ததையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்