பயணியை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் : பேருந்தை மெதுவாக இயக்க கூறியதால் அடி, உதை

கோவையில் பேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணியை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-16 18:03 GMT
கோவையில் பேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணியை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் அருகே பேருந்து வேகமாக சென்றுகொன்டிருந்த போது அதில் பயணித்த பயணி ஒருவர் மெதுவாக இயக்க சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேண்டுமென்றால் நீயே ஓட்டு என கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்