சென்னையில் குடிபோதையில் காவலரை தாக்கிய 2 பேர் கைது

சென்னையில் வாகன தணிக்கையின் போது போக்குவரத்து காவலரை குடிபோதையில் தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-02-11 07:28 GMT
சென்னையில் வாகன தணிக்கையின் போது போக்குவரத்து காவலரை  குடிபோதையில் தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  பெரியமேடு காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரியும்  முரளி என்பவர் நடராஜ திரையரங்கம் அருகே சக காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மது போதையில் இருக்கர வாகனத்தை ஓட்டி வந்த கொருக்குபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம்  முரளி அபராதம் வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமாரின் நண்பர் காவலர் முரளியை தாக்கியுள்ளார். இதையடுத்து  சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்