குடியரசு தலைவர் விருது : தமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகள் தேர்வு

தமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவருக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.

Update: 2020-01-25 18:19 GMT
தமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவருக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை மத்திய அரசு வழங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து 24 காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங், சேலம் நகர கமிஷனர் செந்தில் குமார்,  உட்பட  தமிழகத்தை சேர்ந்த  24 காவல் அதிகாரிகள், விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்