ஹெச்.ராஜா மீதான வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான வழக்கில் இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-23 10:17 GMT
கடந்த 2018ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தில் மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா 2 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்