போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை : ஒரே நபருக்கு 2 பள்ளிகளில் சம்பளம்

அரசு உதவி பெறும் கிருஸ்துவ பள்ளிகளில் போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை வாங்கிய வழக்கில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2020-01-10 13:47 GMT
லூயிஸ் ஆரோக்கியராஜ் என்ற நபர் எருக்கஞ்சேரி வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக 22 ஆண்டுகளாக  வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இதே நபர் பெயரில், வியாசர்பாடியில் உள்ள சூசையப்பர் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சம்பளமும் மாதம் தோறும் இவர் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து, கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் மைக்கேல் பெர்னாண்டோ என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கொடுத்த புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கில், லஞ்சம் வாங்கி கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக, எருக்கஞ்சேரி மற்றும் வியாசர்பாடி பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் , வட சென்னை மாவட்ட கல்வி அலுவலர் பசு பதி என 7 பேர் மீது எம்.கே.வி நகர் காவல்நிலையதில் வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்