நாகை : மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம் - அரசு நடுநிலைப் பள்ளியில் அறிமுகம்

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

Update: 2020-01-10 12:13 GMT
நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. அப்பள்ளியில் பயின்று வரும் குழந்தைகள் சிலர் குடும்ப  சூழ்நிலை காரணமாக காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதாக, ஆசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதனையடுத்து, நன்கொடையாளர்களின் உதவியோடு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். முதல் நாளான இன்று, மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், இட்லி உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்