மக்கள் பயன்பாட்டில் இருந்த ஏரியில் முதலை - ஆபத்தை உணராமல் விளையாடிய இளைஞர்கள்

விருத்தாசலம் அருகே மக்கள் பயன்பாட்டில் உள்ள ஏரியில் இருந்த, முதலையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-03 03:12 GMT
விருத்தாசலம் அருகே மக்கள் பயன்பாட்டில் உள்ள ஏரியில் இருந்த, முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு கோபாலபுரம் கிராமத்தில் உள்ள வண்ணாத்தி ஏரியில் முதலை ஒன்றை பார்த்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது ஏரியில் இருந்த முதலை பிடிபடாததால் அவர்கள் திரும்பி சென்றனர். இந்நிலையில் விளைநிலத்திற்கு புகுந்த முதலையை பிடித்த இளைஞர்கள் ஆபத்தை உணராமல் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்