"முதலமைச்சர் மருத்துவர்களை அழைத்துப் பேச வேண்டும்" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-10-25 08:24 GMT
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் முதலமைச்சர் அவர்களை அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்களும் முதலமைச்சருடன் பேசி தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்