திமுக பெண் நிர்வாகிக்கு கத்தி குத்துசென்னையில் அதிர்ச்சி

Update: 2024-05-05 13:30 GMT

சென்னை, தண்டையார்பேட்டையில் திமுக பெண் நிர்வாகியை கத்தியால் குத்தி, கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாவலர் நகரில் உள்ள வசந்தா என்பவரது வீட்டில், திமுக பெண் நிர்வாகி சரஸ்வதியின் மகள் ஒரு வருட குத்தகை அடிப்படையில் குடியிருந்துள்ளார். ஒரு வருடம் முடிவடைந்ததை அடுத்து, வசந்தாவால் குத்தகைக்கு வாங்கிய பணத்தை திரும்ப தர முடியவில்லை. இந்நிலையில், திமுக பெண் நிர்வாகி சரஸ்வதி, மேற்கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டு, வீட்டை எங்களுக்கு சொந்தமாக்கி கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வசந்தாவின் மகன்கள் மணி மற்றும் கணபதி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரஸ்வதியை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். சரஸ்வதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்