பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-09-18 08:37 GMT
சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து  ஆறுதல் கூறிய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளும்கட்சியினர் அதிகளவில் பேனர் வைப்பதாக குற்றம்சாட்டினார். சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்த ஸ்டாலின், திமுகவினர் யாராவது, சட்டவிரோதமாக பேனர் வைத்தால்,  அவர்கள் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று, திட்டவட்டமாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்