மீனவர்களின் வலையில் சிக்கிய கோடிக்கணக்கிலான மத்தி மீன்கள்

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்களின் வலையில் கோடிக்கணக்கிலான மீன்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-09-14 12:36 GMT
கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்களின் வலையில், கோடிக்கணக்கிலான மீன்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்கடலில் விரித்திருந்த வலையில், மத்தி ரக மீன்கள் கோடிக்கணக்கில் சிக்கியுள்ளன. அதிக பாரம் காரணமாக வலைகளை இழுக்க முடியாததால், வலைகளை கிழித்து மீன்களை கடலிலேயே விட்டுவிட்டு, மீனவர்கள் சோகத்துடன் கரை திரும்பினர். கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கடலில் கலந்து வரும் நிலையில், அதிக அளவிலான மீன்கள் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  கோடிக்கணக்கான மீன்கள் வலையில் சிக்கிய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்