2014ல் மலேசிய விமானம் மாயமான விவகாரம் - அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரிக்கை

கடந்த 2014 ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-09-07 19:57 GMT
கடந்த 2014 ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற இந்த விமானம் 339 பேருடன் காணாமல் போனது. இந்நிலையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த பிஜுகுமார் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டு தாம் திருவனந்தபுரத்தில் அந்தோணியர் கோயில் அருகே நின்ற போது விமானம் ஒன்று கடலில் விழுவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்