திருப்பூரில் காவல்நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு

திருப்பூரில் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-09-04 08:28 GMT
திருப்பூரில் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் குமரன் சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும்  மணிமாறன் என்பவர் இன்று காலை தனது கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவைத்திருந்தார். வாகனத்தில் இருந்து சாவியை எடுக்க மறந்த அவர், திரும்பி சென்று பார்த்தபோது,  வாகனம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமாறன் சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, மர்மநபர் ஒருவர், வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த கடையின் அருகே திருப்பூர் வடக்கு காவல்நிலையம் செயல்பட்டு வரும் நிலையில்,  திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்