கோவையில் பயிற்சி மருத்துவர்கள் தர்ணா : உதவித்தொகை வழங்கவில்லை என புகார்
கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர். கடந்த மே மாதம் முதல் 3 மாதமாக உதவித் தொகை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்றனர். இதையடுத்து மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பாக பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.