"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

Update: 2019-08-17 02:19 GMT
சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார். மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல ஆண்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக நடிகை சுருதி, அவரது தாய், வளர்ப்பு தந்தை என 4 பேர் கடந்தாண்டு  கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தம்மை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் குறித்து கோவை சைபர் கிரைம் முன்பு ஆஜராகி அதற்குரிய ஆவணங்களை, நடிகை சுருதி சமர்ப்பித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்