2 டார்னியர் ரக விமானங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு : கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 டார்னியர் ரக போர் விமானங்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுவதற்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்குள் உள்ள கடற்படை விமான தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கலந்து கொண்டு விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இரண்டு டார்னியர் விமானங்களும், கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், போன்றவற்றில் பயன்படுத்தப்பட உள்ளது. முன்னதாக நிகழ்ச்சியின் போது கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.