திருத்தணியில் சாப்பிட சென்ற நேரத்தில் திருடுபோன வாகனம் - 2 சிறுவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியாகி அதிரவைக்கிறது.

Update: 2019-07-15 19:13 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியாகி அதிரவைக்கிறது. கடந்த 12-ம் தேதி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற வினோத்குமாரின் மோட்டர் சைக்கிள் மாயமானது. இது குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், மோட்டார் சைக்கிளில் வரும் 8 சிறுவர்கள், தங்கள் வாகனம் பழுதானது போல் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிடுவதும், பின்னர், மோட்டர் சைக்கிளை திருடிச் செல்வதும் பதிவாகியுள்ளது. இதை வைத்து, திருத்தணி அடுத்த பெரியகடம்பூர் கிராமத்தை சேர்ந்த சேகர், மணிகண்டன் என்ற இரண்டு சிறுவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவான மேலும் ஆறு சிறுவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்