கேமரா பதிவை வைத்து ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை - அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-12 21:25 GMT
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு  நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு  சாலை விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சாலை விதிகளை மீறியவர்களின் வீட்டிற்கே அபராத ரசிதை அனுப்பும் திட்டம் சென்னை அண்ணாநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் உடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்கு  பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், வீட்டிற்கு அபராத ரசீது அனுப்பும் நடைமுறையை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த உத்தரவிட்டனர். மேலும் கேமரா காட்சிகளை கொண்டு  காவல்துறை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய  உத்தரவிட்டு வழக்கை ஜூலை 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்