தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் கழிப்பறை சீரமைத்து தர கோரிக்கை

தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Update: 2019-07-09 10:01 GMT
தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் கழிப்பறை வசதிகள்  இல்லாததால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  வ.உ.சி  துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு ஏராளமானோர்  பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். அங்கு வருபவர்கள் கழிப்பறை வசதியின்றி சிரமப்படுகின்றனர். கடற்கரை பகுதியில் கழிப்பறை இருந்தும் பழுதடைந்து பூட்டி கிடப்பதால் உடனடியாக அதை  சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்