சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து சபாநாயகருடன் முதலமைச்சர் ஆலோசனை

சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-06-27 02:23 GMT
சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். சபாநாயகரின் அலுவலக அறையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாளை காலை 11.30 மணிக்கு அ.தி.மு.க. அலுவலகத்தில் இந்த கூட்டம் நடப்பதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்