சத்தியமங்கலம் : லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த யானை

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வ​ழியாக, காட்டு யானைகள் அடிக்கடி, கடந்து செல்வது வழக்கம்.

Update: 2019-06-23 16:23 GMT
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வ​ழியாக, காட்டு யானைகள் அடிக்கடி, கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தாளவாடியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று, அந்த சாலையில் சென்றது. அப்போது சாலையோரம் நின்றிருந்த யானை ஒன்று கரும்பு லாரி அருகே வந்ததை கண்டதும் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி உள்ளார். இதைக்கண்ட யானை லாரியிலிருந்து கரும்புத்துண்டுகளை தும்பிக்கையால் பறித்து தின்றபடி வெகுநேரம் சாலையில் இருந்து நகராமல் நின்றது. இதன்காரணமாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. ஆனால் யானையோ அரை மணி நேரம் கரும்புகளை சுவைத்தபடி நின்றுகொண்டிருந்தது. தகவலறிந்த வனத்துறையினர் வந்த யானையை விரட்டியதை அடுத்து, வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
Tags:    

மேலும் செய்திகள்